ஜாதி பெயரை சொல்லி திட்டிய தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் - கதறி அழுகும் பட்டியலின பெண்!

ஜாதி பெயரை சொல்லி திட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவரின் செயல் காரணமாக பட்டியல் இனப்பெண் மன ரீதியாக பாதிப்பு.

Update: 2022-12-02 12:35 GMT

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பட்டியலின பெண் ஒருவரை தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் ஜாதி பெயரை சொல்லி தீட்டி இருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலப்பட்டு அருகே உள்ள சங்கராபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் தான் நல்லம்மாள் என்ற பெண் தன்னுடைய மாமனார் பெயரில் இருந்த பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தங்கவேலு கடந்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மிகவும் பழைய வீடு என்பதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை காரணமாக வீடு பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வீட்டை சரி செய்வதற்கு இவருடைய மகன் கோவிந்தராஜ் என்பவர் வீட்டின் முன்பு பள்ளம் தோன்றியிருக்கிறார்.



இப்படி வீட்டை சரி செய்வதற்கு முயன்ற இவருடைய மகனை அந்தப் பகுதியை சேர்ந்த தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடன் 20 பேர் சேர்ந்து பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வீடு கட்ட கூடாது எனவும், மேலும் தங்களுடைய ஜாதி பெயரை சொல்லி அவர்கள் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் திட்டியது மட்டுமல்லாமல் வீட்டின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு ஆகியவற்றை துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


மேலும் பாதிக்கப்பட்ட பெண் நல்லம்மாள் என்பவர் இது பற்றி உருக்கமான தகவல்களையும் பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் தகாத வார்த்தை காரணமாக அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அழுகும் நிலையில் திமுக செய்யும் அட்டூழியங்களையம் மேலும் தங்கள் கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இங்கு வீடு கட்ட கூடாது என்ற ஊராட்சி மன்ற தலைவர் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News J

Tags:    

Similar News