G20 நாடுகளின் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் இந்தியா: அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் இளைய தலைமுறை!

G20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடையே சாத்தியமான ஆராய்ச்சி நோக்கத்துடன் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-01-30 02:27 GMT

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தனது ஆராய்ச்சிப் பூங்காவில் 31 ஜனவரி அன்று, "கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு" என்ற தலைப்பில் G20 கருத்தரங்கு ஒன்றை நடத்த உள்ளது. G20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த கொள்கைகளை அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும். G20 உறுப்பு நாடுகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் இடையே, ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகள் மற்றும் கருப்பொருள்களை அடையாளம் காண்பதை இந்தியத் தலைமையின் கீழ் இயங்கும் ஜி20 கல்விப் பணிக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.


மாபெரும் இந்நிகழ்வையொட்டி IIT மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி, புதுமை, திறன் சார்ந்த அம்சங்கள் இந்த அரங்குகளில் இடம்பெற்று இருக்கும். கருத்தரங்கில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தையும் பார்வையிட உள்ளனர். புதிதாகப் புதுப்பிக்கப்பட்டு உள்ள ஐஐடி மெட்ராஸ் ஹெரிடேஜ் சென்டரில் இருந்து இக்கல்வி நிறுவனத்தின் பல ஆண்டுகால வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.


IIT மெட்ராஸ் சென்டரில் நடைபெற்றுவரும் அதிநவீன ஆராய்ச்சிகள், மாணவர்களால் நடத்தப்படும் புத்தாக்க மையத்தில் (CFI) இடம்பெற்றுள்ள கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட உள்ளனர். மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களைத் தவிர பல்வேறு ப்ராஜக்ட்டுகளில் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடியும். நாட்டின் வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மையை வெளிப் படுத்தும் வகையில் இக்கல்வி நிறுவன வளாகத்தில் கலாச்சார அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News