ஒரு தலை காதலால் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை எரித்த இஸ்லாமிய வாலிபர் - வலுக்கும் போராட்டங்கள்

தன்னுடைய பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த வாலிபர், காதல் மறுப்பால் உயிருடன் எரித்துள்ளார்.

Update: 2022-08-30 01:38 GMT

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்காவில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தன்னுடைய அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து சென்றார்கள். அப்பொழுது தான் தெரிந்தது அவர் மேல் தீ வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மண்ணெண்ணையால் எரிந்து கொண்டிருந்த தன்னுடைய மகளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார் அவருடைய தந்தை. பிறகு போலீசாரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.


மாணவியின் வீட்டின் அருகில் வசிப்பவர் தான் ஷாருக் உசேன் என்பவர். இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் தன் வீட்டில் அருகே வசிக்கும் இந்த மாணவியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இவற்றை தெரியப்படுத்த மாணவிக்கு பலமுறை அவர் முயற்சி செய்து உள்ளார். ஆனால் மாணவி இது பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் அவரிடம் நிராகரிப்பு செய்துள்ளார். தன்னுடைய காதலை நிராகரித்த காரணத்தினால் அவரை எப்படியாவது பலி வாங்க வேண்டும் என்று முயற்சியை வாலிபர் கையில் எடுத்துள்ளார்.


எனவே மாணவி தூங்கும் அறையில் வீட்டு ஜன்னலில் சரியான சமயம் பார்த்து பெட்ரோல் கேனை எடுத்து வந்து ஜன்னல் அருகில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியின் உடலில் ஊற்றி பிறகு தீயை பற்ற வைத்து சென்று விட்டார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த பெண் திடீரென அலறினால் அப்பொழுது தான் இந்தச் சம்பவம் பெற்றோருக்கு தெரிய வந்தது. அதிகாலை 2.30 மணியளவில் அங்கிதா உயிரிழந்ததாக சிறுமியின் தந்தை சஞ்சீவ் சிங் தெரிவித்தார்.

Input & Image courtesy: OpIndia News

Tags:    

Similar News