ஆ.ராசா பேசிய பேச்சுக்கு தி.மு.க அரசை கலைக்க முடியும் - தெளிவாக விளக்கும் தமிழக பா.ஜ.க செயலாளர் எஸ்.ஜி.சூர்யா

Update: 2022-07-07 02:27 GMT

தமிழகத்தின் நீலகிரி தொகுதி திமுக எம்பி ஏ ராஜா,  'பெரியார்' முன்வைத்த 'சுதந்திர' தமிழகக் கோரிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்கப் போவதாக கூறியுள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திமுக கட்சிக் கூட்டத்தில் இந்த வெளிப்படையான பிரிவினை அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது.

அப்போது பேசிய ராசா, பிரதமரும் உள்துறை அமைச்சரும் அனைவரையும் சமமாக கருதுவதாக கூறுகிறார்கள். நான் அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு என்ற தனிநாடு கோரிக்கையை கைவிட்டு இந்தியாவுக்காக உழைக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் நமது தலைவர் பெரியார் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூறியது எனக்கு நினைவிருக்கிறது.

தமிழர்கள் இந்தியாவுடன் இருக்கும் வரை வளர வாய்ப்பே இருக்காது என்றார். எங்களுக்கு, எந்த வளர்ச்சியும் இருக்காது. தமிழர்கள் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட மாட்டார்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா, தனி நாடு கோரி திமுகவினர் கோரிக்கை வைக்கின்றனர் என்றால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்டார். 


Similar News