கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட CSI மதபோதகர் - விரட்டிப் பிடித்த மாணவர்கள்!

கல்லூரி மாணவியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட மதபோதகர், 4 கிலோமீட்டர் தூரம் சென்று விரட்ட பிடித்த மாணவர்கள்.

Update: 2022-05-06 23:56 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட மதபோதகர் ஒருவரை அங்குள்ள மாணவர்கள் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் விரட்டி பிடித்த கார் கண்ணாடியை தற்போது உடைத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அறிந்து இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ நிர்வாகத்தின் கீழ் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் இரண்டாம் ஆண்டை சேர்ந்த மாணவி ஒருவரிடம் மதபோதகர் தவறான முறையில் ஈடுபட்டுள்ளார். 


மேலும் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பார்த்தபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவியர் கல்லூரியின் அருகே உள்ள உணவகத்திற்கு சென்று உள்ளனர். அங்கு ஸ்பெர்ஜன் சாமுவேல் என்ற மதபோதகர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்த மாணவிகளிடம் தவறான முறையில் அவர் ஈடுப்பட்டதாகவும் மாணவிகளிடம் செல்போன் நம்பரை கேட்டதாகவும் தெரிகிறது. இதனால் மாணவர்களுக்கும் மதபோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதனால் மத போதகர் கார் கண்ணாடியை உடைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டு உள்ளார்கள். மேலும் காரில் தப்பிச் சென்ற மதத்தைத் அவரை பின் தொடர்ந்து நான்கு கிலோமீட்டர் வரை மாணவர்கள் துரத்தி சென்று அவரை பிடித்துள்ளார்கள். மதபோதகர் சாலையில் வேகமாக காரை இயக்கி செல்லும் வீடியோ மாணவர்களது செல்போனில் படம் பிடித்து உள்ளார்கள் உள்ளார். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News