இந்துக் கடவுள்களை கேலி செய்த ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர்: கைது பின்னணி!

இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் குற்றம்சாட்டு.

Update: 2022-06-29 01:31 GMT

Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர், மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும் குற்றஞ் சாட்டப்பட்டு டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 153 மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்காக நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஜுபைரின் ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து பல ஹிந்து மத பதிவுகள் வைரலான சில நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டது.


இந்துக் கடவுள்களை கேலி செய்யும் வகையில் தனது பழைய பதிவுகளை நெட்டிசன்கள் பகிர்ந்ததையடுத்து, சுபைர் தனது பேஸ்புக் கணக்கை நீக்கியதாக தெரிகிறது. ஜுபைர் சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து டஜன் கணக்கான ட்வீட்களை நீக்கியுள்ளார். இருப்பினும் அந்த ட்வீட்களின் உள்ளடக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. முகமது ஜுபைரின் கைது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பெரும்பாலானோர் குறிப்பாகச் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சி வண்ணம் ஃபாலோ செய்யும் பயனாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். பா.ஜ.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா கைது செய்யப்படாததால் அதிக வருத்தத்தில் இருப்பதாக அவர்கள் தொடர்ச்சியான வண்ணம் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.


மே மாதம், டைம்ஸ் நவ் சர்ச்சைக்குரிய கியான்வாபி அமைப்பு குறித்த விவாதத்தின் போது, ​​நூபுர் ஷர்மா, இஸ்லாமிய நம்பிக்கைகளைக் குறிப்பிடும் பிற மதங்களை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். அந்த வீடியோவை சூழலுக்கு வெளியே எடுத்துக்கொண்டு, நுபூரை ஒரு வெறித்தனமான வகுப்புவாத வெறுப்பாளர் என்றும் கலவரத்தைத் தூண்டக்கூடியவர் என்றும் அறிவித்து தனது ட்விட்டர் பின் தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் மட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை ஆனால் தற்போது Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டு இருப்பது அவரின் ஆதரவாளர்களுக்கு இடையில் தொடரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Input & Image courtesy:  OpIndia news

Tags:    

Similar News