அஞ்சாமல் மலைப்பாம்புடன் விளையாடும் சிறுமியின் வைரல் வீடியோ !

மலைப்பாம்புடன் வீட்டில் வளர்க்கும் பிராணிகளைப் போல் விளையாடி வரும் சிறுமியின் வீடியோ.

Update: 2021-12-14 13:55 GMT

இன்றைய கால கட்டத்தில் இருக்கும் சிறு பிள்ளைகள் பயம் என்பதே அறியாமல், தனக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நெருப்பு என்றால் சுடும் என்று பெற்றோர்கள் கூறியும் அவற்றைச் சுட்டு பார்த்த பிறகுதான் அவற்றை உணர்கிறார்கள். தமிழில் இதற்கு பொருத்தமான பழமொழி என்னவென்றால், இளங்கன்று பயம் அறியாது என்பது தான். இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தில் துணிவுடன் இறங்கிவிடுகிறார்கள். அதுபோல மலைப்பாம்புடன் சிறுமி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் எவ்வித அச்சமும் இன்றி விளையாடி மகிழ்கின்றார். பாம்பு சிறுமியின் கால் அருகில் வந்த போதும் எவ்வித அச்சமும் கொள்ளாதது பாம்பின் தலையை வருடிக் கொடுக்கின்றார். பாம்பின் மீது படுத்துக் கொண்டு சிறுமி எவ்வித அச்சமும் இல்லாது சிறுமி விளையாடி மகிழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை snake world எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


மலைப்பாம்புடன் அந்த குழந்தை பயமின்றி விளையாடியதை பார்க்கும் பொழுது இளம் கன்று பயமறியாது என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியானவுடன் வைரலாக பரவி, அதிகமான லைக்குகளையும் பெற்ற ஒரு வீடியோவாக பார்க்கப்படுகிறது. 

Input & Image courtesy:India news




Tags:    

Similar News