தாவூத் உறவினர் என கூறி பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூருக்கு கொலை மிரட்டல் - ம.பி போலீசார் விசாரணை

பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூருக்கு துபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப் பட்டது குறித்து மத்திய பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-21 10:59 GMT

பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூருக்கு துபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப் பட்டது குறித்து மத்திய பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் போபால் லோக்சபா தொகுதியின் எம்.பி பிரக்யா தாக்கூர், இவருக்கு சமீபத்தில் மொபைல்போன் வாயிலாக ஒரு மிரட்டல் வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மும்பை நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத் இப்ராஹிம் உறவினர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அப்போது அவர் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதால் பிரக்யா கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக பிரக்யா சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பிரதேச போலீசார் கூறியதாவது ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயிலிருந்து பிரக்யா தாக்கூருக்கு போனில் மிரட்டல் வந்ததாக தெரிகிறது, இது குறித்து விசாரித்து வருகிறோம் இதே நபர் தான் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் மருமகளும் பா.ஜ.க'வை சேர்ந்த அபர்ணாவுக்கு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்க. இதன் பின்னணியில் உள்ளவர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றனர்.


Source - Dinamalar

Similar News