முதல் முறையாக இந்திய உணவை சாப்பிட்ட ஸ்பெயின் நாட்டுப்பெண்: ரியாக்சன் வீடியோ வைரல்!

முதல் முறையாக இந்திய உணவு சாப்பிட்ட ஸ்பெயின் நாட்டின் பெண்ணின் ரியாக்சன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

Update: 2022-02-08 14:23 GMT

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுது போக்குகள் உண்டு. சிலருக்கு தேடித்தேடி உணவுகளை சாப்பிடுவது, ஒரு சிலருக்கு வெளிநாட்டு உணவுகளை சாப்பிட்டு எப்படி இருக்கின்றது? என்று கருத்துக் கூறுவது போன்றவை. அந்த வகையில் தற்போது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் முதன் முதலாக இந்திய உணவு சாப்பிட்ட அது எப்படி இருக்கின்றது? என்பது தொடர்பாக ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்பெயினை சேர்ந்த பாத்திமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். 


ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரில் உள்ள உதய்பூர் என்ற உணவகத்தில் பாத்திமா டி டெடுவான் 'சிக்கன் டிக்கா' மசாலாவுடன், ரொட்டியை பெண் முதன் முறையாக சாப்பிடுகிறார். உடனே எதிரில் இருப்பவரை பார்த்து கண்கள் விரிய Wow என அனுபவித்து ரியாக்ட் செய்கிறார். தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே, "இது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உணவை நான் எப்படி என் வாழ்நாள் முழுவதும் தவறவிட்டேன்" என பேசுகிறார். அதன் பின்னர் சிக்கன் துண்டை ருசி பார்க்கும் பாத்திமா, என் வாழ்நாளில் நான் சாப்பிட்ட சிறந்த உணவு இதுதான் என்று தனது கருத்துக்களை படைத்திருக்கிறார்.


இந்த வீடியோவை பார்த்த பல இந்தியர்கள் அடுத்த முறை நீங்கள் ஹோட்டலுக்கு செல்லும் பொழுது, பட்டர் சிக்கன் ப்ரை செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கி உள்ளார்கள். மேலும் சிலர் இந்தியாவில் இதுபோன்ற பல உணவுகள் உள்ளன நீங்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்று அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்கள். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News