பிரதமருக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பதிவிட்ட நபரை அதிரடியாக கைது யோகி அரசு

சமூக வலைதளங்களில் பிரதமருக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 30 வயது நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

Update: 2022-07-03 01:23 GMT

உத்தரபிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சஹாஸ்வான் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவு செய்ததற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில் படவுன் மாவட்டத்தில் உள்ள சஹாஸ்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடயால் கிராமத்தில் வசிக்கும் ரெஹான் என்பவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முகநூலில் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார்.


சஹாஸ்வான் கோட்வாலியின் பொறுப்பாளர் சஞ்சீவ் குமார் சுக்லாவின் கூற்றுப்படி, சஹாஸ்வானில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் சார்பாக ஆபாசமான கருத்துக்களைக் கூறியதற்காக ரெஹான் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சமூகவலைத்தள பதிவுகளும் ரெஹானால் தவறான தகவல்களைப் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்பட்டது.


சுக்லாவின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட ரெஹான் மீது ID சட்டத்தின் பிரிவு 67 இன் கீழ் போலீசார் FIR பதிவு செய்து அவரை கைது செய்தனர். 2000 இன் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 குறிப்பாக, ஆபாசமான தகவல்களை மின்னணு வடிவத்தில் அனுப்புவதற்கு அபராதம் விதிக்கிறது. எனவே இத்தகைய பதிவுகளை அவர் செய்ததற்காக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Input & Image courtesy: OpIndia news

Tags:    

Similar News