கன்றுக்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கூட்டம் !

Muslim youth caught raping a calf in Alwar, Rajasthan

Update: 2022-03-03 02:00 GMT

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 4 முஸ்லிம் இளைஞர்கள் கன்றுக்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டதன் மூலம் இந்த சம்பவம் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை கண்டித்து அப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய நான்கு பேரும்  கன்றுக்குட்டியை மலைப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று, சத்தம் வராதபடி அதன் வாயை கட்டி , பாலியல் பலாத்காரம் செய்து, அந்த மிருகத்தனமான செயலை படம் பிடித்தனர். சுபைர் மற்றும் சுனா உடனடியாக கைது செய்யப்பட்டனர், மற்ற இருவரும் தற்போது  கைது செய்யப்பட்டனர் .

சுமார் 20-25 பசுக்கள் மற்றும் ஆடுகளை வைத்திருக்கும் சுஹாத்பூரைச் சேர்ந்த உள்ளூர் விவசாயி, அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அவர் மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அதே சுஹாத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. 

ஆல்வார் காவல்துறை கண்காணிப்பாளர் சாந்தனு கே சிங் கூறுகையில், பெண் கன்றுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இதனை தொடர்ந்து  5,000 க்கும் மேற்பட்டோர் திஜாரா நகரில் நடந்த கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கடைகள் அடைக்கப்பட்டன. 

இந்த வெட்கக்கேடான செயல் பிப்ரவரி 10 அன்று நடந்தது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட நிர்வாகத்திடம் சமூக தலைவர்கள் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News