நொய்டா இரட்டை கோபுர கட்டிடங்கள் தகர்ப்பு ஏன் தெரியுமா?

நொய்டாவில் அமைந்திருக்கும் இரட்டை கோபுர கட்டிடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்படுகின்றன.

Update: 2022-08-29 02:43 GMT

நொய்டாவில் கட்டப்பட்ட இரட்டைக் கோபுர கட்டிடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது. இதனை காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தற்போது வெளி ஏற்றப் பட்டுள்ளார்கள். புகை மற்றும் தூசி மாசு ஏற்படலாம் என்பதால் மருத்துவமனைகள் பலவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு நொய்டாவின் செக்டார் 93 கேபிள் சூப்பர் டெக் கோர்ட் ஹவுஸிங் சொசைட்டியால் கட்டப்பட்ட இந்த 40 மாடிகள் கொண்ட இரட்டைக் கோபுரங்களின் அமைப்பு நிர்மாணிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கோபுரங்கள் நொய்டா பகுதியில் புவியியல் சூழ்நிலைக்கு சார்ந்ததாக கட்டப்படவில்லை கட்டுமானம் சட்ட விரோதமானது என்று கூடி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நொய்டாவின் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டைக் கோபுர குடியிருப்பு வளாகத்தை இடிப்பதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.


பல்வேறு மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதிக்குள் கோபுரங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது பிற்பகல் 2:30 மணிக்கு இன்று வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. நொய்டா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட உள்ளன சுகாதார அவசர நிலைக்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


சுமார் ஆயிரம் குடியிருப்புகளை கொண்ட இந்த இரட்டைக் கோபுரங்களில் வசித்தவர்கள் 5000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். மேலும் மொத்தமாக தகர்க்கப்பட ஒன்பது நொடிகள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இடிப்புக்கு பின்னர் சுமார் மூன்று ஆயிரம்லாரி லோடுகள் மூலம் கழிவுகள் அகற்றப்படுவதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகலாம் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Input & Image courtesy: Polimer news

Tags:    

Similar News