"சிலைகளைக் காலால் எட்டி உதைத்தேன்" - 699 கிராமங்களை மதம் மாற்றியதாக தம்பட்டம் அடித்த போதகர் கைது!
"சிலைகளைக் காலால் எட்டி உதைத்தேன்" - 699 கிராமங்களை மதம் மாற்றியதாக தம்பட்டம் அடித்த போதகர் கைது!
ஆந்திராவில் ஒரு பக்கம் தொடர்ந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் பயந்து வரும் நிலையில், இதற்கு காரணமான இந்து மதம் மீது வெறுப்பைப் பரப்பும் கிறிஸ்தவ மிஷனரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்து கடவுள் சிலைகளை எட்டி உதைத்ததாகவும், இந்துக்களை மதம் மாற்றி 'கிறிஸ்து கிராமங்களை' ஏற்படுத்தி வருவதாகவும் தம்பட்டம் அடித்து பிரவீண் சக்கரவர்த்தி என்ற மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘Sylom Blind Centre’ என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் பிரவீண் சக்கரவர்த்தி, அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று மத மாற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தானும் தனது சக மத போதகர்களும் ஆந்திராவில் பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வருவதாகவும் அவ்வாறு ஒரு கிராமத்தில் உள்ள அனைவரையுமே மாற்றி விட்டால் அதற்கு 'கிறிஸ்து கிராமம்' என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.
Filed complaint with Union Home Secretary & FCRA Division (MHA) against 'Sylom Blind Center' represented by its President Mr. Praveen Chakravarthy who indulged Christian Conversions.
— Legal Rights Protection Forum (@lawinforce) December 5, 2019
Sought cancellation of its FCRA, Freeze Bank Accounts & investigation into his other activities. pic.twitter.com/a03orNAjZs
மக்களை மதம் மாற்றிய பின் அவர்களது வீடுகள், கோவில்களில் உள்ள சிலைகளை காலால் எட்டி உதைத்து அவர்களையும் உதைக்கச் சொல்வதாகவும் பெருமையாகப் பேசி இருந்தார். இந்த வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டே சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது Legal Rights Protection Forum என்ற தன்னார்வ அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிரவீண் சக்கரவர்த்தி குறித்து புகார் அனுப்பியது.
இந்த வருடம் வெளிநாட்டு நன்கொடையாளரிடம் பிரவீண் பேசும் வீடியோ ஒன்றை Legal Rights Protection Forum வெளியிட்டது. அதில் தன்னுடன் 3642 மதபோதகர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், இது வரை 699 'கிறிஸ்து கிராமங்களை' ஏற்படுத்தி உள்ளதாகவும் தம்பட்டம் அடிப்பதைப் பார்க்க முடிந்தது. இதைத் தொடர்ந்து குண்டூரைச் சேர்ந்த சிங்கம் லக்ஷ்மி நாராயணா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆந்திர CID பிரிவு போலீசார் பிரவீண் சக்கரவர்த்தியைக் கைது செய்துள்ளனர்.