ஜாதிய வெறியை தூண்டும் திருமாவளவன் : நாடாளுமன்ற உறுப்பினர் வாயில் இருந்து வரும் வார்த்தையா இது..?

ஜாதிய வெறியை தூண்டும் திருமாவளவன்

Update: 2021-10-11 05:30 GMT

ரவுடிகள் என்றால் பிராமணர்கள் தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




ரவுடிகள் என்றால் பிராமணர்கள் தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் காஷ்மீரில் பண்டிட் என்ற பெயர் இருந்தால் அவர்கள் பிராமணர்கள். அதேபோல் பெயருக்குப் பின்னால் மிஸ்ரா என்று இருந்தால் அவர்கள் உத்திரபிரதேச பிராமணர்கள்.

உத்தரபிரதேசத்தில் பூமிகார் சமூகத்தினர் தங்களை பிராமணர்கள் என்று கூறி தாங்களும் பிராமணர்களாக மாறிவிட்டார்கள். எனவே அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களும் தற்போது  ரவுடிகளாக உள்ளனர். அவர்கள் வரலாறு அவ்வாறுதான் உள்ளது. ஆகவே உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் ரவுடிகள் என்றால் அவர்கள் பிராமணர்கள்தான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை ரவுடிகள் என்றால் பிராமணர்கள் தான் என்று திருமாவளவன் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை ரவுடிகள் என்றால் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அவரால் சொல்ல முடியுமா. மேலும் அவர் சொல்வதன் மூலம் தமிழகத்தில் உள்ள பிராமணர்கள் ரவுடிகள் அல்ல நல்லவர்கள் என்று அவரே ஒப்புக்கொள்கிறார் என்று தெளிவாகிறது. ஆனால் அவர்களை நீங்கள் எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




Similar News