திருட்டு மண் புத்தி,நினைவிருக்கிறதா 11 மணி 05 நிமிடம் வாக்குறுதி.? அமைச்சர் செந்தில் பாலாஜியை கதற விடும் அண்ணாமலை!

senthil-balaji-annamalai-in-war-of-words-on-twitter

Update: 2021-10-23 01:14 GMT

பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாகரிகம் அற்ற முறையில் பதில் அளித்திருந்தார்.

அதில்,அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது. தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது. அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமில்லாமல் கண்டபடி உளறி வருகிறார். அவருக்கு மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை என குழையடி சண்டையில் பேசுவதைப்போல விமர்சித்திருந்தார்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து பாஜக அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


அதில், மணல் திருடும் அமைச்சர் அவர்கள் என் மண்டையில் களிமண் என்கிறார். இருக்கட்டும், எனக்கு பெருமை தான், களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம். திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும்! நினைவிருக்கிறதா 11 மணி 05 நிமிடம் வாக்குறுதி என்று அவர் தெரிவித்துள்ளார். இப்படி, இருவருக்கும் இடையிலான வார்த்தை போர் கடந்த 2 நாட்களாக வலுத்து வருகிறது.











Tags:    

Similar News