கால்பந்து போட்டிகளில் கலக்கும் நாய்க்குட்டியின் வைரல் வீடியோ !

கோல் போஸ்டில் எதிர் அணியினரை கோல் போடவிடாமல் தடுக்கும் நாய் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Update: 2021-11-30 13:57 GMT

சமூக வலைத்தளங்களில் நம் பதிவிடும் கருத்திற்கும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்து மோதல்கள் நடந்து கொண்டுதான் வருகின்றது. மிருகங்கள் சில சமயங்களில் மனிதர்களிடம் அன்பிற்காக ஏங்கும் தருணங்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரல் ஆகுவது பழக்கம். செல்லப்பிராணிகளாக வளர்க்கும் விலங்குகளிடம் மக்கள் அதிக அன்புடன் இருக்கும் காரணத்தினால் அதே அன்பை அத்தகைய பிராணிகள் நம்மிடம் கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். எனவே தங்களுடைய முதலாளிகளுக்கு ஏதாவது ஒரு இக்கட்டான சூழல் வரும்பொழுது அவர்களை பாதுகாத்து அந்த ஜீவன்கள் அவர்களை காக்க இறுதிவரை போராடுகின்றனர். 


அந்த வகையில் நாய் ஒன்று கால்பந்து மைதானத்தில் விளையாடும் போது கோல் போஸ்டில் நின்று கொண்டு தனக்கு எதிரே வரும் அனைத்து பந்துகளையும் கோல் போட விடாமல் தடுத்து நிறுத்திய செயல் அனைவருக்கும் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் படங்களில் விளையாட்டுப் போட்டிகளின் போது நாய் போட்டியாளர்கள் ஒருவராகக் கலந்து கொண்டு வெற்றி பெறுவது போன்ற படங்கள் அமைந்திருக்கும். அதை நிஜமாக்கும் வகையில் இந்த நாய்க்குட்டியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். 


இதே போன்று இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் கங்காரு ஒன்று அன்பிற்காக ஏங்கி மனிதர் ஒருவர் தனது கையை நீட்டியவுடன் கட்டியணைத்து அன்பை பொழிகின்றது. இந்த வீடியோ பலரின் மனங்களை வென்று வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை இதுவரை 1,394 பேர் லைக் செய்துள்ளனர்.

Input & Image courtesy: News 18



Tags:    

Similar News