பிரபாஸை வைத்து பிரமாண்ட பான் இந்தியா படம் இயக்கப்போகும் சுகுமார்

பிரபாஸை வைத்து அடுத்தபடியாக படம் இயக்கவிருக்கிறார் இயக்குனர் சுகுமார்.

Update: 2022-12-27 13:10 GMT

பிரபாஸை வைத்து அடுத்தபடியாக படம் இயக்கவிருக்கிறார் இயக்குனர் சுகுமார்.




 


பிரபாஸ் தற்பொழுது கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' படமும் வரும் ஆண்டில் வெளியாக உள்ளது.




 


இந்த நிலையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் பிரபாஸ் நடிக்க உள்ளார், பிரமாண்ட பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் தயாரிக்க உள்ளார். 'புஷ்பா 2' முடிந்தவுடன் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் சுகுமார்.

Similar News