பாகிஸ்தான் பத்திரிகையாளரை கடத்தி சித்திரவதை செய்த தலிபான்கள் - என்ன நடந்தது?

பாகிஸ்தான் பத்திரிகையாளரை தலிபான்கள் கடத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிய பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Update: 2022-08-07 13:33 GMT

பாகிஸ்தான் பத்திரிகையாளரை தலிபான்கள் கடத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிய பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ் மல்லிக் இவர் பியான் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஆப்கானிஸ்தானுக்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றார். அந்நாட்டில் தாலிபன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஓராண்டு நிறைவு பெறுவதைப் பற்றியும், அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் அல்கொய்தா தலைவன் கொல்லப்பட்டது தொடர்பாகவும் செய்தி சேகரிக்கச் சென்றார்.

எந்த நிலையில் அனஸ் மல்லிக் திடீரென மாயமானார், அவரை தலிபான்கள் கடத்தி சென்றுள்ளதாக தகவல் வெளியானது. இதை அவரது நண்பர்கள் தெரிவித்தனர், ஆனால் மல்லிகின் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் தூதரகம் தலிபான் அரசிடம் தகவல் கேட்டது அதன்பின் பத்திரிகையாளர் அனஸ் மல்லிக் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது, அவர் தலைநகர் காபூலில் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களுடன் தூதரும் தொடர்பில் இருக்கிறது என்பதையும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி உறுதிப்படுத்தினார்.

தாலிபன்கள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அனஸ் மல்லிக் கூறும் பொழுது செய்தி சேகரிப்பதற்காக காபுலுக்கு சென்றடைந்த போது என்னிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. அப்பொழுது சில தலிபான்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் எடுத்து கடத்திச் சென்றனர் செல்போனை பறித்துக் கொண்டனர்.

நாங்கள் பயங்கரமாக தாக்கப்பட்டோம் எங்களின் கைகள், கண்கள் கட்டப்பட்டு தாலிபான்களாலும் விசாரிக்கப்படும் பின்னர் வேறு அறைக்கு மாற்றப்பட்ட நான் நேற்று விடுவிக்கப்பட்டேன்' என்றார்.


அனஸ் மல்லிக்கின் கார் டிரைவர் மற்றும் குழுவினர் தலிபான்கள் பிடியில் உள்ளனர், கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் செய்தி சேகரிக்க சென்ற இந்திய பத்திரிகையாளர் டேவிஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Maalai Malar

Similar News