NCC தேசிய விருது வென்ற சென்னை மாணவர்: பிரதமர் மோடியை சந்திக்க கிடைத்த வாய்ப்பு!

தேசிய மாணவர் படையும் ஜூனியர் பிரிவில் சிறந்த வீரருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற சென்னை மாணவருக்கு பிரதமரை சந்திக்க கிடைத்த வாய்ப்பு.

Update: 2022-12-08 02:56 GMT

சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஒ.எ பள்ளி மாணவர் தான் அகிலேஷ் கல்யாண் என்பவர். இவர் தேசிய மாணவர் படையின் ஜூனியர் பிரிவு சிறந்த வீரருக்கான விருதையும், தங்க பதக்கத்தையும் பெற்று இருக்கிறார். இதன் காரணமாக தேசிய மாணவர் பணியில் ஏர் விங் பிரிவில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட சென்னை மாணவர் அகிலேஷ் பி கல்யாண் பிரதமரை பார்ப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்து இருக்கிறது.


குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவருடன் உணவு அருந்த இவருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஏனெனில் அது பெருமை கொள்ள வேண்டிய விஷயம் தான். யார் ஏர் விங் பிரிவில் சிறந்த செயல்பட்டமைக்கான இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.


இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தமிழர்களின் NCC பிரிவு பிரதிநிதியாக இவர் பங்கேற்க உள்ளார். மேலும் தேசிய மாணவர் படையில் இத்தகைய கௌரவத்தை பெற்றுள்ள மாணவர் அகிலேஷ் பி கல்யாணத்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News