பெண்களை இழிவாக பேசுவது தி.மு.கவின் மரபுகளில் கலந்த ஒன்று - ஒரு வரலாற்று பார்வை!
திராவிட முன்னேற்ற கழகம் சி.என்.அண்ணாதுரை துவக்கி இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் முக்கியமாக வேரூன்றி நிற்கும் ஓர் இயக்கம். இதன் சுவடுகளை பார்த்தால் பல சம்பவங்கள் தெரியும் குறிப்பாக இவர்கள் பெண்களை அதிலும் பெண் முன்னேற்றத்தை பற்றி நீட்டி முழங்கிவிட்டு பின்னர் பெண்களை பற்றி இழிவாக பேசும் வரலாற்றை திரும்பி பார்த்தால் அதில் சிலவற்றை அச்சில் ஏற்ற இயலாது, சிலவற்றை மக்கள் கேட்டால் மறந்தும் கூட தி.மு.கவிற்கு பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள் அப்படிப்பட்டது பெண்களை பற்றிய தி.மு.கவின் பேச்சும் மூன்றாம் தர வார்த்தைகளும்.
இது சி.என்.அண்ணாதுரை மட்டுமல்ல அவரை தொடர்ந்து வந்த மு.கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் கழக பேச்சாளர்கள், கழக இரண்டாம் கட்ட தலைவர்கள் என தி.மு.கவில் பெண்கள் பற்றி இழிவாக பேசாதவர்களை விரல் விட்டு எண்ணிணாலும் அவை ஒற்றை இலக்கத்திலேயே முடியும். அவற்றை எல்லாம் எழுதவேண்டும் என்றால் பல பக்கங்கள் தாண்டும் அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே மேற்கோள் காட்டியிருக்கிறோம்.
சி.என்.அண்ணாதுரை ஈ.வே.ராமசாமியின் மீது கொண்ட கோபத்தால் தனியாக திராவிட முன்னேற கழகத்தை துவக்கினார். மேடைப்பேச்சு, படிப்பு, எழுத்து என தன் திறமைகளால் ஆட்சியில் ஜொலித்த அண்ணாதுரை மீது ஒரு விமர்சனம் வந்தது. அது ஒரு நடிகையுடன் அவரை தொடர்புபடுத்தி, அரசியல்வாதிகள் மற்றும் நடிகைகளின் மீது விமர்சனம் வருவது இயல்பானதுதான்.
ஆனால் அதனை ஓர் முதல்வர், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், சமுதாயம் மதிக்கும் ஓரு பேச்சாளர் நாசுக்காக மறுத்து பேசியிருக்கலாம், இல்லை எனில் ஒதுங்கி இருக்கலாம் அதற்கு சி.என்.அண்ணாதுரை கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? "நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல" என்று, ஓர் சம்பவத்தை அதிலும் பெண் சம்மந்தப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை பற்றி பொதுவில் கேட்கும் போது ஒரு தலைவர் கூறும் வார்த்தையை பாருங்கள்? இவருக்கு "பேரறிஞர்" என தி.மு.கவினர் மத்தியில் பெயர் வேறு எவ்வளவு கேவலம் என்று பார்த்தீர்களா?