43 வயதில் முதன் முறையாக சொந்த மாவட்டமான திருவாரூரை சுற்றி பார்த்த உதயநிதி - ஊர்பாசமா? ஓட்டு தேவையா?
43 வயதில் முதன் முறையாக சொந்த மாவட்டமான திருவாரூரை சுற்றி பார்த்த உதயநிதி - ஊர்பாசமா? ஓட்டு தேவையா?
திருவாரூர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி'க்கு மிகவும் பிடித்த ஊர். காரணம் கருணாநிதி'யின் அரசியல் செயல்பாடுகளை முதலில் இங்குதான் மாணவர் பருவத்தில் துவங்கினார். கருணாநிதி'யின் பிறந்த ஊரான திருக்குவளையும் திருவாரூரில் இருந்து மிக அருகாமையில் உள்ள கிராமம் தான்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திருவாரூரை மாவட்ட தலைநகராக அறிவித்து அதன் கீழ் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை என 7 தாலுக்கா'க்களை உள்ளடக்கி தனி மாவட்டமாக கருணாநிதி அறிவித்தார். திருவாரூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம்தான் தமிழ்நாட்டின் முன்மாதிரி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
கருணாநிதி'யின் கடைசி கால தேர்தலில் திருவாரூர் எம்.எல்.ஏ'வாக இருந்துதான் இறந்தார். கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் முத்துவேலரின் நினைவிடம் கூட திருவாரூரி்ல் உள்ள காட்டூரில்தான் உள்ளது. கருணாநிதி'யின் மகள் செல்வி கூட இன்றும் இங்குதான் வசிக்கிறார்.
இப்படி கருணாநிதியின் பிரியமான திருவாரூர் மாவட்டத்திற்கு தன் வாழ்நாளில் முதன்முறையாக தி.மு.க'வின் தற்போதைய பட்டத்து இளவரசரும் கருணாநிதியின் பேரனுமாகிய உதயநிதி சுற்றிபார்க்க வந்துள்ளார் தனது 43'வது வயதில்.
தாத்தா'வின் பூர்வீக கிராமம் மற்றும் அதன் சுற்றுபுறங்களை பேரன் பார்ப்பதில் ஆச்சர்யம் இல்லைதான். ஆனால் 43 வயது வரை ஏதோ அயல்நாட்டில் வசித்தது போலவும், தமிழ்நாட்டின் பக்கமே வராதது போலவும், திருவாரூர் மாவட்டம் ஏதோ தனிநாடு போலவும் இங்கு வர தனி ஆவணங்கள் தேவை என்ற நிலை உள்ளது போலவும் தனது 43 வயது வரை இந்தப்பக்கம் தலை வைத்து கூட படுக்காத உதயநிதிக்கு இப்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் என்ன வேலை?