கேப்டன் தோனி தலைமை.. இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம்.. பிறந்த நாளில் ரசிகர்கள் அமர்க்களம்..

Update: 2023-07-08 05:30 GMT

இந்திய அணியின் பொற்காலமாக தோனியின் கேப்டன்சி காலத்தை சொல்லலாம். அன்று முதல் இன்று வரை கேப்டன் டோனிக்கு அணி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயது வித்தியாசம் இன்றி கேப்டன் தோனி அவர்களின் விளையாட்டு ஆச்சரியத்துடன் தான் பார்த்து வருகிறார்கள். அண்மையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போது கூட பலரும் தோனியை பற்றி பேச தொடங்கினார்கள்.


41 வயதிலும் ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்காக 5வது முறையாக வென்று தன்னிகரற்ற வீரராக தோனி வலம் வருகிறார். குறிப்பாக தற்போது இந்திய அணியில் இருக்கும் பல்வேறு வீரர்களின் பின்னணியில் கேப்டன் தோனி அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் ஆகியோரின் வளர்ச்சி பாதையில் கேப்டன் தோனி அவர்களின் பங்கு முக்கியமானது.


அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தாலும் தற்போது வரை அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தோனி தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார் இதில் அவருடைய ரசிகர்கள் பெரும் அளவில் உற்சாகத்துடன் குறிப்பாக 52 அடியில் முழு நீள கட்டவுட் வைத்து அமர்க்களம் எடுத்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News