பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2வது தங்கம்: பிரதமர் மோடி வாழ்த்து!

Update: 2022-08-01 00:45 GMT

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஜெரிமி தங்கம் வென்றார்.

இந்நிலையில், காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நமது யுவசக்தி சரித்திரம் படைத்து வருகிறது! ஜெரேமி ல்ரினுங்காவுக்கு வாழ்த்துக்கள். அவர் தன்னுடைய முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று மற்றும் ஒரு அற்புதமான சாதனையையும் படைத்திருக்கிறார். இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும், புகழையும் கொண்டு வந்திருக்கிறார். அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News