கடை வீதி, மருத்துவமனையில் மத பிரச்சாரம்: இந்து முன்னணி புகாரால் போலீஸ் விசாரணை!

Update: 2022-03-07 08:49 GMT

கடை வீதிகளில் உள்ள மக்களிடம் கிறிஸ்தவர் சிலர் மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நியூஸ்கீம் சாலையில் மத பிரசாரம் செய்தவர்களை இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரவி தலைமையிலான நிர்வாகிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி இரண்டு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: காரில் வந்து ஒரு சிலர் நியூஸ்கீம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கடை வீதியில் உள்ளவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி மத பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மத பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்றோம்.

ஆனால் அவர்கள் கேட்காமல் இருந்ததால் போலீசாரிடம் ஒப்படைத்தோம். உடனடியாக நடவடிக்கை தொடர வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்தோம். இவ்வாறு அவர் கூறினர்.

Source: Dinamalar

Image Courtesy: Salon.Com

Tags:    

Similar News