தேர்வெழுதும் மாணவர்களுக்காக சிவன் கோயிலில் ஹயக்கீரிவர் பூஜை!

Update: 2022-04-09 08:41 GMT

தமிழகம் முழுவதும் தேர்வெழுதும் மாணவர்களுக்காக பல்வேறு கோயில்களில் இந்து முன்னணி சார்பில் ஹயக்கீரிவர் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் சிவன் கோயிலில் தேர்வெழுதும் மாணவர்களுக்காக ஹயக்கீரிவர் பூஜை நடைபெற்றது. அதே போன்று திருப்பூர் 49வது வார்டு பகுதியிலும் பூஜை நடத்தப்பட்டது.

மேலும், கடலூர் தாடி நத்தம் கிராமத்தில் இந்து முன்னணி அன்னையர் முன்னணி சார்பாக மாணவ, மாணவிகள் நன்கு படித்து கல்வியும், ஞானமும் பெற வேண்டி ஸ்ரீ ஹயக்கீரிவர் பெருமானுக்கு பூஜை மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News