குழந்தைகள் மீது கிறிஸ்தவ மதம் திணிப்பு - இந்து முன்னணி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

Update: 2022-05-07 11:38 GMT

பண்பாட்டு வகுப்பு என்கின்ற பெயரில் குழந்தைகளை வைத்து கிறிஸ்தவ மதத்தை திணித்து வருவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் தலைமையிலான நிர்வாகிகள் ஒன்றாக சென்று மனு அளித்துள்ளனர். அதில் தியாகதுருவம் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமங்களில் கிறிஸ்தவ மத போதகர்கள் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு, துண்டு பிரசுரம் மற்றும் நோட்டீஸ் வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்து மதத்தினர் மத்தியில் மத கலவரத்தை ஏற்படுத்துகின்ற வகையிலும், இந்து கடவுள்களை மிகவும் இழிவாக பேசி வருகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கு பண்பாட்டு வகுப்பு நடத்துகின்றோம் என்ற பெயரில் கிறிஸ்தவ சபையினர் மதத்தை திணித்து வருகின்றனர். எனவே குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக இந்த கூட்டத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News