'ஒருநாள் ஜெயிலில் இருந்து பாருங்கள்' என அற்புதம்அம்மாள் கூறியதற்கு, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் மகன் கூறுவது என்ன?

Update: 2022-05-19 08:17 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முப்பது ஆண்டுகளுக்குப் பின்பு நேற்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டார்.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 நபர்களில் ஒருவர் பேரறிவாளன். இவரை உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் 142'யை பயன்படுத்தி விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டது.


பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பை விடுத்த உச்ச நீதிமன்றத்தை ஆதரிப்பவர்கள் பலர் இருந்தாலும், அதற்கு ஈடாக பலரும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வெடிகுண்டு வெடித்து மரணம் அடைந்த பொழுது, அவர் மட்டும் இறக்கவில்லை அவரைச் சுற்றியிருந்த போலீசார் கட்சிக்காரர்கள் என பலர் உடல் சிதறி இறந்தனர். அப்படி உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி சம்தானிபேகம் என்பவர் மகன் அப்பாஸ் பேரறிவாளனின் விடுதலை குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:


'ஒரு நாள் சிறையில் இருந்து பாருங்கள்' என்று அற்புதம்அம்மாள் கூறுகிறார். ஆம் அது மிகவும் கடினம் தான்.

ஆனால் நாங்கள் எதைத்தான் எங்கள் வாழ்க்கையில் கண்டோம். என் தாயின் உடலை பொட்டலம் போல் கட்டி கொடுத்தார்கள். 33 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்கள் தாய் தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களது படிப்பு வாழ்க்கை என அனைத்தும் போய்விட்டது. 


News 18 TN

Similar News