நெல்லையில் மாணவியை காதலித்து ஏமாற்றிய சி.எஸ்.ஐ பாதிரியார் - நெருக்கமாக இருந்துவிட்டு எரித்துக்கொல்வதாக மிரட்டல்!
திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவியை காதலித்து ஏமாற்றிய சி.எஸ்.ஐ பாதிரியார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி காவல்துறை ஆயுதப்படை மைதானம் பகுதியை சேர்ந்தவர் இன்பராஜ். அவரது மகன் மில்டன் கனகராஜ். வயது 26 ஆகிறது. இறையியல் படிப்பு முடித்து கே.டி.சி. நகர் சி.எஸ்.ஐ சர்ச்சில் பயிற்சி பாதிரியாராக உள்ளார்.
இவரது வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு மாணவியுடன் ஒன்றரை ஆண்டாக நெருங்கி பழகி உள்ளார். திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட மாணவியை மிரட்டியுள்ளார். அவதூறாக பேசியதோடு மட்டுமல்லாது எரித்து கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். மாணவியின் புகாரின் பேரில் தாலுகா போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Input From: Dinamalar