அட சூப்பர், அற்புத அம்சங்களுடன் உதகை மலை ரயில்.. தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர்...

Update: 2023-07-16 05:13 GMT

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப் பட்டது.


இதனையடுத்து நேற்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற உதகை மலை ரயில் வண்டியை மத்திய இணை அமைச்சர் L. முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் புதிய ரயில்வண்டியின் பெட்டிகள் அழகியலோடு சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டிருக்கும். மேலும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் இந்த ஒரு ரயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.  


புதிய வடிவமைப்பிலான பெட்டிகளில் அகலமான கதவுகள் மற்றும் பெரிய ஜன்னல்கள் மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதி ஆகியவை பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும். பெட்டிகளில் 110 வோல்ட் எல்.இ.டி விளக்கு மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுகள் உள்ளன. அதோடு ரயில் நிலையத்தின் நடைமேம்பாலம் அருகே ரூ. 1.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முன்பதிவு அலுவலகத்தையும் வாகனங்கள் நிறுத்துமிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News