விருத்தகிரீஸ்வரர் கோயில் வளாகத்தில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது!

Update: 2022-01-17 02:27 GMT

விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ஓட்டலில் டாஸ்மாக் மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட எஸ்.பி., தனிப்படை போலீசாருடன் நேற்று (ஜனவரி 16) விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது விருத்தகிரீஸ்வரர் கோயில் கிழக்கு கோபுர வால் அருகே, கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஓட்டலில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் விற்றுக்கொண்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஓட்டலை நடத்தி வரும் பாபு 40, ஊழியர் பந்தல்ராஜன் 20 என்ற இருவரை தனிப்படை போலீசார் பிடித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source: Dinamalar

Image Courtesy:Times Of India

Tags:    

Similar News