திருவண்ணாமலை: அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகள் மயக்கம்!

Update: 2022-06-24 08:34 GMT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சத்து மாத்திரை மற்றும் மதிய உணவு சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 43 பேருக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் அருகே படிஅக்ரகாரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் 61 மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஜின்க் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மதிய உணவு வேளையில் சத்துணவு மற்றும் முட்டை அளிக்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகளுக்கு தலை சுற்றல், வயிற்று வலி, மயக்கம் உள்ளிட்டவைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுவதை உணர்ந்த அவர்களின் பெற்றோர்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனை முன்பாக குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News