கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு.!

Update: 2021-02-02 14:34 GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இரண்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது வரை அரசு மருத்துவமனையில் போடப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: குறைந்தது 150 மருத்துவ பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகளும், கோவின் செயலியில் பதிவு செய்துள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 66 மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதே போன்று மற்ற மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News