4 மீனவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.!

4 மீனவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.!

Update: 2021-01-23 17:41 GMT

புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 18ம் தேதி 214 விசைப்படகுகளில் 750க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்தவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் மோதியுள்ளனர். இதில் மெசியா 50, நாகராஜ் 45, செந்தில்குமார் 28, டார்வின் சாம்சன் 27 ஆகிய 4 மீனவர்கள் கடலில் விழுந்துள்ளனர். இதன் பின்னர் அவர்களை சக மீனவர்கள் தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இதனிடையே இலங்கை கடற்கரை பகுதியில் 4 மீனவர்களின் உடல்கள் மிதக்கிறது என்ற தகவல்கள் கிடைத்தது. இதனிடையே மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து கொன்று விட்டதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் உடல்களை ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மீனவர்களின் உடல்கள் ராமேஸ்வரம் எடுத்துவரப்பட்டது. இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மீனவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து மீனவர்களின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
 

Similar News