திருச்சி ஓட்டலில், திருப்பூரை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி.!

திருச்சி ஓட்டலில், திருப்பூரை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி.!

Update: 2020-12-20 16:06 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் ஹரிகரன் 38, இவர் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் நகைக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் அப்பகுதி மக்களிடையே ஏராளமான பணத்தை பெற்றுக்கொண்டு நகை அளிக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்த ஹரிகரன் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்தநிலையில், ஹரிகரன், தனது பெற்றோர் பலராமன் 75, புஷ்பா 73, மனைவி திவ்யா, மகன் அசோக் 8, ஆகியோருடன் கார் மூலம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். இன்று அதிகாலை ஹரிகரன், தனது குடும்பத்தினருடன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் 5 பேரும் நகை பாலீஷ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை சயனைடை தின்றுள்ளனர். அப்பாது ஹரிகரனின் 8 வயது மகன் துடிதுடிப்பதை பார்த்து அவனை காப்பாற்ற போராடி உள்ளனர். உடனே அவர்கள் அறை கதவை திறந்து மகனை தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

அப்போது ஓட்டல் ஊழியர்கள் நடந்த விபரத்தை அறிந்து உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Similar News