சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி நியமனம்.!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி நியமனம்.!

Update: 2020-12-31 17:54 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் பானர்ஜியை நியமிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி கடந்தாண்டு நவம்பர் 11 முதல் பதவி வகித்து வருகிறார். இவருடைய பணி காலம் இன்றுடன் (டிசம்பர் 31) நிறைவடைந்து பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சஞ்ஜீவ் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொல்கத்தா டெல்லி, மும்பை, ஜார்க்கண்ட், கவுகாத்தி, ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News