டிசம்பர் 28க்குள் 80 சதவீதம் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே.!

டிசம்பர் 28க்குள் 80 சதவீதம் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே.!

Update: 2020-12-26 16:26 GMT

சென்னையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் படிப்படியாக புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோயின் போது முடக்கப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ஓடத் துவங்கியது. ஆரம்பக்கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்களுக்கு Peak Hours என்று சொல்லப்படும் காலை 7 முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வருகின்ற டிசம்பர் 28ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில் சேவை 80 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 

Similar News