சென்னையில் அமேசான் தொழிற்சாலையால் வேலை வாய்ப்பு பெருகும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

சென்னையில் அமேசான் தொழிற்சாலையால் வேலை வாய்ப்பு பெருகும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

Update: 2021-02-17 18:00 GMT

மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாக கருதப்படும் அமேசான் நிறுவனம், இந்தியாவில் உற்பத்தி ஆலையை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான இடமாக சென்னையை தேர்வு செய்துள்ளது தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில், ஃபயர் டிவி ஸ்டிக்குகளின் ரிமோட்களை தயாரிக்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமேசான் அறிவிப்பை வரவேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சென்னையில் தொழிற்சாலை அமைக்கப்படுவதை வரவேற்றுள்ளார். இதன் மூலம், ஏராளமான இளைஞர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News