இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் நீங்க சொல்ற சமூக நீதியா? - ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பும் அண்ணாமலை

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது ஏன்? என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கேள்விகள்.

Update: 2022-08-19 01:44 GMT

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வரும் ஒரு வீடியோவாக ஒரு நரிக்குறவ பெண்ணின் வீடியோ இருக்கிறது. காரணம் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த நரிக்குறவர்களின் ஒட்டுமொத்த குரலாகவும் பிரதிபலித்திருக்கிறார். வாக்குறுதிகளும் மற்றும் அவற்றிற்காக எடுக்கும் முயற்சிகளும் ஒவ்வொரு அரசாங்கத்திற்கு முக்கியமானதாக இருக்கின்றது மக்களின் நிலைமை இல்லை ஏன் நாம் இந்த வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டுதான் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் வாக்குக் கொடுத்த பின்னர் அதை நிறைவேற்றாமல் இருப்பது மக்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம். 


பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில் சகலகலா வல்லவர்களாக தி.மு.க திகழ்கின்றது என்பதை மீண்டும் ஒருமுறை அவர்கள் நிரூபித்து உள்ளார்கள். ஏனெனில் தற்போது நரிக்குறவ பெண்ணின் வேதனையான வீடியோ தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. அவர்களுக்கு பல்வேறு வகைகளில் தருவதாகவும் வீட்டுமனை தருவதாகவும் கூறி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசுக்கு தற்போது தமிழகம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார். 



இதுபற்றி அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்,  விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த தி.மு.க அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா? மக்களின் நம்பிக்கைகள் மீது விளையாடும் தி.மு.க அரசுக்கு சமூகநீதி தான் முக்கியம் என்று கூறுவது எப்படி பொருந்தும். 

Input & Image courtesy:  Twitter Post

Tags:    

Similar News