பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை.. அமைச்சர் திட்டவட்டம்.!

பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை.. அமைச்சர் திட்டவட்டம்.!

Update: 2020-12-19 10:45 GMT

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு மேலாக பணி ஆணைக்காக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் 7 வருடங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டோடு சான்றிதழ் நேரம் காலாவதியாவதால் பணி நியமன ஆணையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை சந்தித்தார். அவர்களிடம் இன்னும் ஒரு சில நாட்களில் பணி நியமனத்துக்கான ஆணை வழங்கப்பட்டுவிடும் என உறுதியளித்துள்ளார். இவரது அறிவிப்புக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News