குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது.. தமிழக அரசு தகவல்.!
குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது.. தமிழக அரசு தகவல்.!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தினவிழாவில், கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசுத் தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வருகின்ற ஜனவரி 26ம் தேதி காலை 8 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதனிடையே அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் குடியரசு தின விழாவை பார்வையிடுவதற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக காண்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.