பா.ஜ.க, தி.மு.க மோதல் - நேரு ஸ்டேடியத்தில் நடந்தது என்ன?

பா.ஜ.க மற்றும் தி.மு.க இருதரப்பினரும் போலீசார் பேச்சுவார்த்தை நடந்தது என்ன?

Update: 2022-05-26 12:30 GMT

சென்னைக்கு வருகை தந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு சென்னை ஜே.எல்.என் உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற திட்டத்தின் கீழ் 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 'லைட் ஹவுஸ் திட்டம் - சென்னை' திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட 1,152 வீடுகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையின்போது இருதரப்பினரிடையே கோஷங்கள் எழுப்பி இதுதொடர்பான அதில் ஏற்பட்ட விவகாரம் காரணமாக தற்போது போலீசார் இரு தரப்பினருக்குமிடையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாஜக தரப்பில் சார்பாக மோடி வாழ்க! பிரதமர் வாழ்க! என்று கோஷங்கள் பலமாக எழுப்பப்பட்டது. மறுபக்கம் கருணாநிதி வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கோஷம் எழுப்புவது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டு அதனை தடுப்பதற்கு போலீசார் தற்போது முயன்றுள்ளார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News