சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து சேவை தொடரும்.!

சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து சேவை தொடரும்.!

Update: 2021-01-11 11:43 GMT

பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு சென்னை மாநகரில் பொதுமக்களின் நலன் கருதி 24 மணி நேரமும் செயல்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் வசதிகளுக்காக மாநகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக மாதவரம், கே.கே நகர், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

இன்று நாளை மறுநாள் வரை (ஜனவரி 11,12,13) 24 மணி நேரமும் கூடுதலாக 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News