கல்குவாரி விபத்து: காணாமல் போன 8 பேரை தேடும் பணி தீவிரம்.!

கல்குவாரி விபத்து: காணாமல் போன 8 பேரை தேடும் பணி தீவிரம்.!

Update: 2021-02-05 09:10 GMT

கல்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இன்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதூர் கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் 50க்கும் மேற்பட்டோர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அதே போன்று நேற்று காலை வழக்கம் போன்று வேலை செய்து வந்தனர். அப்போது மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் பாறைகள் நடுவில் சிக்கிக்கொண்ட 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்வர்கள் பாறைகளில் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் நேற்று காலை முதலே ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் இன்று காலை முதல் மீட்புபணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போன 8 பேரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில சென்று மீட்புபணியை வேகப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News