ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து.. முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து.. முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!

Update: 2021-02-01 17:33 GMT

போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்த செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஃஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நாட்களில் அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையும் கைவிடப்படுகிறது என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்த செய்யப்படுவதாகவும் கூறினார்.
இந்த அறிவிப்புக்கு ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Similar News