தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்பு - ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவன் கைது!

Update: 2022-07-31 06:38 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லி மசூதி தெருவில் வசித்து வருபவர் அனாசலி. வயது 21.  பொறியியல் படிக்கிறார். இவரை இன்று அதிகாலை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென கைது செய்துள்ளனர். மேலும் மாணவனிடம் இருந்து ஒரு லேப்டாப் இரண்டு செல் போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவரை வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட தகவலாக கைதாகியுள்ள அனாசலி லண்டன், மொராக்கோ, போன்ற நாடுகளில் உள்ளவர்களிடம் இணையதளம் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து பேசியவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? மேலும் கைதான அனாசலியின் முந்தைய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மத்திய புலனாய்வு துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தீவிரவாத குழுக்களின் சமூக வலைதள பக்கத்தில் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களது திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்ததாகவும் மாணவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

Input From: Dailythanthi 


Similar News