தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Update: 2021-01-15 09:01 GMT

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவும் பரவலான மழை பெய்து வருகிறது. இதே போன்று தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிற மாவட்டங்களை பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

பருவம் தவறி கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் இப்படி மழை பெய்து கெடுத்துவிட்டதே என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Similar News