செட்டிநாடு குழுமம் பல நூறு கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை திடுக்கிடும் தகவல்.!

செட்டிநாடு குழுமம் பல நூறு கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை திடுக்கிடும் தகவல்.!

Update: 2020-12-15 16:21 GMT

செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறை கடந்த 9ம் தேதி சோதனை செய்தது. அதில் ரூ.23 கோடி பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூ.700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதில் கணக்கில் வராத ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை உட்பட தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதேபோன்று செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 9 ஆம் தேதி செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News