புதிய தொழிற் கொள்ளையை வெளியிட்ட முதலமைச்சர்: 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு.!

புதிய தொழிற் கொள்ளையை வெளியிட்ட முதலமைச்சர்: 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு.!

Update: 2021-02-16 14:54 GMT

புதிய தொழிற்கொள்கை மூலமாக அடுத்து வருகின்ற 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். தலைமை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின்படி இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையையும் வெளியிட்டார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ரூ.28,053 கோடி முதலீட்டில் 28 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 68,775 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
 

Similar News