கோவை: 4,144 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.!

கோவை: 4,144 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.!

Update: 2021-02-25 16:33 GMT

பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று கோவை வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், திருப்பூர் மற்றும் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 4,144 பிரதமர் மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், ஆளுநர், மத்திய, மாநில அரசுகள் பங்கேற்றனர்.
 

Similar News