பிப்.,8 முதல் வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

பிப்.,8 முதல் வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

Update: 2021-02-05 10:56 GMT

கொரோனா தொற்றுக்கு இடையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது.

கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், பிப்ரவரி 8ம் தேதி முதலே கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உட்பட அனைத்து கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் வாரத்திற்கு 6 நாட்களும் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 

Similar News